Tuesday 3 May 2016

புனித.பிலிப்பு!

கலிலேயாவிலுள்ள பெத்சாயிதா என்ற ஊரில் தோன்றிய பிலிப்பு, யோவான் நற்செய்தியாளரால் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்படுகின்றார்.

இறைமகன் இயேசு, பேதுருவையும், அந்திரேயாவையும் தேர்ந்து கொண்டபிறகு, என்னைப் பின்பற்றி வா என்று கூறி பிலிப்பைத் தேர்ந்துகொண்டார். பிலிப்பும் இயேசுவின் அழைத்தலை ஏற்று உடனே அவரைப் பின் தொடர்ந்தார்.

இதிலிருந்து பிலிப்பு எந்த அளவிற்கு இயேசுவுக்கு பணிந்திருந்தார் என்பதை தெரிந்துக்கொள்ளலாம். பின்பு பிலிப்பு உடனே தன் நண்பர் நத்தனியேலிடம் சென்று, நடந்ததை எல்லாம் விளக்கினார். நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமோ என்ற நத்தனியேலிடம் வந்து பாரும் என்று கூறி பதிலளித்தார் பிலிப்பு.

இதிலிருந்து பிலிப்பு எவ்வளவு திறந்த மனதுடன் இருந்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளலாம். 200 தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் கூட போதாதே என்று யேசுவிடம் பதிலளித்தார் பிலிப்பு (யோவான் 6:7)

ஒருமுறை இயேசுவைப்பற்றி கேள்விப்பட்ட கிரேக்கர்கள் யெருசலேமை வந்தடைந்து, யேசுவைப் பார்க்க வேண்டுமென்று பிலிப்பிடம் கேட்டனர். உடனே பிலிப்பு இதை அந்திரேயாவிடம் தெரிவித்து இதைப்பற்றி இருவரும் கலந்து பேசி, கிரேக்கர்களைப்பற்றி இயேசுவிடம் தெரிவித்தார்.

இதிலிருந்து பிலிப்பின் உயர்ந்த எண்ணங்களை அறியலாம். தூய ஆவியாரின் வருகைக்கு பிறகு பிலிப்பு ஆசியா சென்று மறைபரப்புப்பணியில் நாட்களை செலவிட்டார் என்று தியோடற், யுசிபியுஸ் என்ற பழங்காலத்து வரலாற்று ஆசியர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

No comments:

Post a Comment