Monday 23 May 2016

புனித ஜான் பாப்டிஸ்டா டி ரோஸி (St.John Baptista de Rossi)!

இவர் ரோமில் டொமினிக்கன் சபையில் படித்தவர். படிக்கும்போது இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார்.

இறக்கும் வரை இவர் இந்நோயால் அவதிப்பட்டார். 1721 ஆம் ஆண்டு ஜான் பாப்டிஸ்டா டி ரோஸி குருவானார்.

 இவர் குருவான நாளிலிருந்து ஏழைமக்களுக்காகவும், நோயாளிகளுக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்தார். ஏழை மக்களுக்கென்று, எதிர்கால வாழ்வில் முன்னேறுவதற்காக ஒரு குழுவை அமைத்தார்.

 இதன்வழியாக மக்களுக்கு தன் நம்பிக்கையும், தைரியத்தையும், அவர் அவர்களுக்குரிய உரிமையோடு பேசுவதற்கும், நோன்பிருந்து செபிப்பதற்கும், தவத்தின் வழியாக பல நற்பலன்களை அடைவது எப்படி என்பதையும் கற்றுக்கொடுத்தார்.

1737 ஆம் ஆண்டிலிருந்து இறக்கும் வரை, தீயவர்களை எதிர்த்து போராடி ஏழை மக்களின் உரிமைகளை அவர்களுக்கு பெற்றுத்தந்தார். கானானிய மக்களின் நண்பராக வாழ்ந்து அவர்களின் ஆன்மகுருவாகவே இறந்தார்.

இவர் இறந்தபிறகு ஜாதி, மதம் என்று பாராமல் அனைத்து மக்களும் இவரின் கல்லறைக்கு வந்து, இவரை வழிபட்டு, நற்பலன்கள் பலவற்றை பெற்று சென்றனர்.

No comments:

Post a Comment