Monday 11 April 2016

உண்மையான நல்ல வாழ்க்கை...

ஜென் துறவி ஒருவர், தன் சீடர்களிடம் பேசிக் கொண்டிருக்கையில், அவர்களிடம், "ஒருவருடைய நல்ல வாழ்க்கையின் ஆயுள்காலம் என்ன?" என்று கேட்டார்.

அதற்குச் சீடர்களுள் ஒருவர், "வேறு என்ன, நூறு வயதுதான்" என்று கூறினார். குருவோ, "இல்லை" என்றார்.

"அப்படியெனில், 90 வயது" என்று மற்றவர் கூறினார். அதற்கும் "இல்லை" என்று குரு கூறினார்.

அப்படியே சீடர்கள், 80? 70? என்று சொல்ல, அதற்கும் மறுத்தார். பின் அவர்கள் பொறுமையிழந்து, "வேறு என்னவென்று நீங்களே சொல்லுங்கள்" என்று கூறினர். அதற்கு குரு, "ஒரு வினாடிதான்" என்று கூறினார்.

 "அது எப்படி ஒரு வினாடியில் நல்ல வாழ்க்கையை வாழ்ந்ததாகச் சொல்ல முடியும்?" என்று அனைவரும் கேட்டனர்.

பின் குரு, "நல்ல வாழ்க்கை என்பது ஒரு வினாடியில்தான் தெரியும். எப்படியெனில் ஒவ்வொரு வினாடியையும், வாழ்க்கையின் தொடக்கமாக நினைக்க வேண்டும்.

மேலும், அதையே முடிவு என்றும் நினைக்க வேண்டும். அதிலும், அந்த வினாடியில் எந்த ஒரு பழையதையோ அல்லது வருங்காலத்தையோ நினைத்து வாழக் கூடாது.

ஒரு வினாடி பிறக்கிறதென்றால், அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும். அதுதான் உண்மையான நல்ல வாழ்க்கை" என்று சீடர்களுக்குச் சொல்லி, உண்மையான வாழ்க்கையின் தத்துவத்தைப் புரிய வைத்தார்.

இது என் தம்பிக்காக! 


1 comment:

  1. நல்லதொரு பதிவு கலை.
    உண்மையாகவே உன் தம்பி கொடுத்து வைத்தவன்.இப்படி ஒரு பக்தியான அக்கா கிடைத்ததற்கு.

    ReplyDelete