Wednesday 2 March 2016

வேண்டாம் இந்த விபரீதம்!

பலருடைய நிலைப்பாடு மதில்மேல் பூனை, அல்லது கூட இருந்து குழி பறிக்கும் குள்ள நரி. இது நாயா? நரியா? என்று தெறியாத வெளிவேடம்.

 ஒண்ணுல கூட்டணி என்று சொல்லு அல்லது எதிரணி என்று சொல்லு. மூன்றாம் அணி என்று சொல்லும்போதே விவகாரம் விஷ்வ ரூபம் எடுக்கத் தொடங்கிவிடுமல்லவா.

"என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார்" உண்மை. ஆன்மீகத்தில் மூன்றாவது அணிக்கு இடமே இல்லை.

அருள் வாழ்வில் இடைப்பட்ட நிலைக்கு வாய்ப்பே இல்லை. ஒன்றில் ஆண்டவனோடு அல்லது அலகையோடு, அருளோடு அல்லது இருளோடு. நீதி அல்லது அநீதி, உண்மை அல்லது பொய்மை இதுதான் நியதி.

பெயல்சபூலுடன் பேச்சுவார்த்தை வைத்து இறையரசு அமைக்க இயேசு ஒருபோதும் விரும்பியதில்லை. அலகையுடன்; சமரசம் செய்து இறையரசை தக்க வைக்க இயேசுவின் அரசுக்கு அவசியமில்லை. இரட்டை வேடம், இரட்டை வாழ்க்கை இயேசுவுக்கு ஏற்புடையது அல்ல. "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது"

இத்தகைய இரட்டை நிலை, எப்பொழுதும் எதிரிக்கு பின் வாசலை திறந்தே வைத்திருக்கும். எந்த நேரத்திலும் வெளியே அனுப்பியவர்கள் தோரணையோடு உள்ளே வருவார்கள். அப்புறம் "பின்னைய நிலைமை முன்னைய நிலைமையை விடக் கேடுள்ளதாகும்."

கடவுளின் சார்பில், அவரோடு மட்டும் இருப்போம். நமக்கு குறை இருக்காது.


No comments:

Post a Comment