Saturday 21 January 2017

".. .. .. .. பின்பற்றினார்கள்"

பேதுருவும் அவர் சகோதரர் அந்திரேயாவும் இயேசுவைப் பின்பற்றினார்கள்.(மத் 4:20) செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் இயேசுவைப் பின்பற்றினார்கள். (மத் 4:22) தொடர்ந்து வரும் பகுதியிலும் மக்கள் கூட்டம் பெருந்திரளாய் இயேசுவைப் பின்தொடர்ந்ததையும் (மத்4:25) மத்தேயு குறிப்பிடுவதில் உள்ள உட் பொருளைக் காண்பது அவசியம்.

'பின்பற்றுவதும்' 'பின்தொடர்வதும்' தனக்காக வாழாமல், தான் பின்பற்றும் அல்லது தொடரும் இயேசுவுக்காக வாழ்வது என்னும் உட் பொருளைக் கொண்டுள்ளது. இவ்வாறு இயேசுவுக்காக, ஆகவே பிறருக்காக வாழும் வாழ்க்கை ஒரு 'தனிமனித வாழ்க்கை' அல்ல மாறாக 'குழுவாழ்வு' என்னும் உட்பொருளை தன்னுள் அடக்கியுள்ளது. ஆகவே இயேசுவைப் பின்பற்றுவோரும் பின்தொடர்வோரும் இத்தகைய குழு வாழ்வு வாழ அழைக்கப்படுகிறோம்.

இக்குழு வாழ்வுக்குத் தன்னையும் சொந்த பந்தத்தையும்(மத்8:18-22) சொத்து சுகத்தையும்(மத் 19:21) தியாகம் செய்ய வேண்டும்.ஆண்டவனையும் அயலானையும் முன்னிலைப்படுத்தி குழுமமாக வாழ இப்பின்தொடர்தல் வலியுறுத்துகிறது. எனவே, கிறிஸ்தவத்தில் குழு வழிபாடு, குழு வாழ்க்கை, அன்பியம், பங்கு, ஆகிய எண்ணங்கள் புதிது அல்ல, மாறாக கிறிஸ்தவத்தில் உள்ளடங்கியது. இயேசுவைப் பின்தொடரும் நாம் இவற்றைப் பின்பற்றுவோம். வாழ்கை வளமாகும். வாழ்த்துக்கள். ஆசீர்;.

2 comments: