Saturday 27 February 2016

திருந்திவாழ அழைப்பு!

பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரை பிலாத்து கொன்றான் என்ற செய்தியை, யூதா்கள் இயேசுவுக்கு அறிவிக்கின்றனர்.

ஆனால், இயேசுவின் பதில், கேள்வியாக அமைவது நமக்கு வியப்பைத் தருகிறது.

பிலாத்து கொன்றான் என்ற செய்திக்கும், இறந்தவர்கள் மற்றெல்லாரையும் விட பாவிகள் என நினைக்கிறீர்களா? என இயேசு கேட்ட கேள்விக்கும் தொடர்பு இல்லாதது போல தோன்றுகிறது. சற்று ஆராய்ந்து பார்த்தால், அதனுடைய உண்மையான விளக்கம் நமக்கு தெரியவரும்.


இயேசுவிடம் அந்த செய்தியைச் சொன்னவர்கள், உள்ளத்தில் ஒன்றை வைத்து, இயேசுவிடத்தில் வெறும் செய்தியை மட்டும் சொல்கிறார்கள். அவர்களின் உள்ளத்தில் மறைத்த செய்தி என்ன?

வாழ்வை முழுமையாக முடிக்காமல் கொலை செய்யப்பட்டோ, விபத்திலோ, தற்கொலை செய்தோ இறக்கிறவர்கள், பாவிகள் என்ற மனநிலை, யூதா்கள் மத்தியில் இருந்தது. அதனால் தான் கடவுள் அவர்களைத் தண்டித்துவிட்டார் என்று, அவர்கள் நினைக்கிறார்கள்.

ஆனால், இயேசு இங்கிருக்கிறவர்களை விட, அவர்கள் பெரிதாக குற்றம் ஒன்றும் செய்துவிடவில்லை, என்று பதில்கொடுக்கிறார்.

இன்றைக்கு நாமும் நமது குற்றங்களை மறைத்து, அடுத்தவர் செய்யும் தவறுகளை, சிறிய குற்றங்களை, மிகப்பெரிதாக நாம் உருவாக்கிவிடுகிறோம்.

நாம் செய்கிற பாவம், நமது கண்களுக்கு தெரிவதில்லை. அடுத்தவரின் குற்றங்கள் தான், நமக்கு மிகப்பெரிதாகத் தெரிகிறது. அந்த தவறான மனநிலையிலிருந்து திருந்தி வாழ, இயேசு விடுக்கும் அழைப்பிற்கு செவிகொடுப்போம்.

No comments:

Post a Comment