Wednesday 2 December 2015

புனித சவேரியார் போல... !நாமும் தூய சவேரியார் ஆகலாம்...!

மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?(மத்தேயு 16:26).

நான் தூய சவேரியாரின் திருஉடலை இரண்டு தடவை கோவா சென்று பார்த்திருக்கேன்.உண்மையாகவே இதற்க்கு நான் பாக்கியம் பெற்றவள் என்று சொன்னால் மிகையாகாது.

முதல் தடவை போகும் போது நிறைய நேரம் ஜெபம் பண்ணினேன்.ஏனென்றால் ஒரு சொல்லாடல் உண்டு எந்த  புது ஆலயத்துக்கு  போனாலும் மூன்று கருத்துக்களுக்காக வேண்டிக்கொண்டால் நிறைய ஆசிர்வாதம் கிடைக்கும் வேண்டிக்கொண்டவர்களுக்கு என்று.அதனால்  அந்த மூன்று கருத்தில் ஒரு கருத்து நான் புனிதை ஆக வேண்டும் என்பது.அது நடக்கும் என்று இன்றும் விசுவசிக்கிறேன்.

நாளை நான் இருந்து  பணி செய்த நாகர்கோவில் கோட்டாறு மறைமாவட்டத்தின்  பாதுகாவலர் புனித சவேரியார் திருநாள்.திருவிழாவைக் கொண்டாட சாரை சாரையாக மக்கள் கூட்டம் பக்தியுடன் திரண்டு வருவதை காணலாம் இது ஒரு பகுதி.


நாளை நாகர்கோவிலில் உள்ள  பள்ளிகள்,கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை விடப்படும். மறுபகுதி பார்த்தால் மாணவ மாணவிகள் கூட்டமும் ஆங்காங்கு காணலாம்.ஆக கோட்டாறு மறைமாவட்டமே கலை கட்டும்.அனைவருக்கும் தூய சவேரியார் பெருவிழா வாழ்த்துக்கள்.

எனக்கு சவேரியார் என்றாலே ஞாபகத்திற்கு வரும் பாடல் வரிகள் இவைகள் தான்.இந்த வார்த்தைகளை நற்செய்திலும் காணாலாம்.வாழ்கையில்  நம் எல்லோருக்கும் ஒரு திருப்புமனை உண்டு.அன்று தூய சவேரியாருக்கு திருப்புமுனையை கொடுத்தது இந்த வரிகளே அதாவது  உலகமெல்லாம் எனக்காதாயம்.பாடல் வரிகளை கீழே  காணலாம் .

உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை ...

அழியும் செல்வம் சேர்ப்பதா! அழியா ஆன்மாவை காப்பதா! ...
இந்த கேள்விக்கு பதிலாய் வாழ்ந்தவர் யார்!
அவரே புனித சவேரியார்!


நாளை தாயாம் திருச்சபையோடு இணைந்து  புனித பிரான்சிஸ் சவேரியாரின் விழாவை கொண்டாடப்போகிறோம். இவர் போதித்த விதமே தனி.அதாவது  கடல் கடந்து இந்தியா வந்து, மொழி, கலாசாரமும் மாறுபட்ட மக்களிடையே உழைத்து, நற்செய்தி அறிவித்து, திருமறைப் பணி புரிந்த மாபெரும் புனிதர். அவருடைய வாழ்வையும், பணியையும் எண்ணிப்பார்த்து நாம் விசுவாச ஊக்கம் பெற அழைக்கப்படுகிறோம். 

நீங்கள் அனைவரும் தீபாவளி நேரத்தில் டி.வியில் சிறப்பு நிகழ்சிகளை பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.அந்த நேரத்தில் ஒரு டி.வி சேனலில் பாகுபலி படத்தின் ஒவ்வொரு இடைவேளைக்குப் பிறகும் சுமார் 38 தடவை ஆச்சி மசாலா உலகளவில் அவாட் வாங்கியதை திருப்பி திருப்பி விளம்பரப்படுத்தினார்கள்.அதற்கு மட்டும் கோடிகணக்கில் செலவிட்டிருந்தார்கள்.நானும் அதை பார்த்தேன்.

இதை ஏன் கூறுகிறேன் என்றால் நம் ஒவ்வொருவரையும் கடவுள் எவ்வளவு அழகாக படைத்திருக்கார்.அப்படி நம்மை படைத்த கடவுளுக்கு நம்மால் என்ன செய்ய முடிகிறது? நாம் நற்செய்தியை பரப்ப எப்படிப்பட்ட விளம்பரங்களை செய்கிறோம்.

வெளிநாட்டில் இருந்து வந்த மாமனிதர்கள் போதித்ததால் இன்று நாம் கிறிஸ்தவர்கள்.அன்று நம் முன்னோர்கள் அவர்கள் போதனையை கேட்டு கிறிஸ்தவர்கள் ஆனார்கள்.இன்று நம் போதனையை கேட்க எத்தனை பேர்கள் இருக்கிறார்கள்?

இன்று நாம் கடவுளுக்கு சான்று பகிர எப்படிப்பட்ட முயற்ச்சிகளை மேற்கொள்ளுகிறோம்.வெறும் திருவிழா கொண்டாடியதோடு நின்று விடக்கூடாது நம் விசுவாசம்.மேலும், அதற்கும் மேலாக நம் விசுவாசம் இருக்க வேண்டும்.  

நமது ஜெபங்கள் நிறைய நேரம் ஆண்டவரே, ஆண்டவரே, என்று சொல்லி ஜெபிக்க கூடியதாக மாத்திரமே உள்ளது.இவ்வாறு இருந்தால்  நாம்  விண்ணரசில்   நுழைய முடியவே முடியாது. மாறாக, தூய சவேரியாரைப் போன்று  தந்தையின் திருவுளத்தின்படி செயல்பட்டால் மட்டுமே  விண்ணரசில் நுழைய முடியும்.அது நம் கையில் தான் உள்ளது.  


தந்தையின் திருவுளத்தின்படி நடந்தவர் என்ற ஆண்டவரின் மொழிகள் புனித சவேரியாருக்கு நன்கு பொருந்துகின்றன. இறை நம்பிக்கையுடைய அனைவருக்கும் அறைகூவல் விடுக்கும் வசனம் இது. நமது இறைப்பற்று சொல்லில் முடங்கி விடாமல், செயல்களில் வெளிப்பட வேண்டும். செப ஆர்வலர்களுக்கும் வெல்விளியாக இச்சொல் அமைந்துள்ளது. 

செபக்குழுக்களில் சேர்ந்து செபிக்கிறவர்கள் தங்கள் வாழ்வு தந்தையின் விருப்பப்படி அமைய முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், செபம் பயனற்றதாக மாறிவிடும். புனித சவேரியார்போல நமது இறைப் பற்றும் பாறைமீது கட்டப்பட்ட வீடு போல அமையட்டும்.

“மாற்றம் நிச்சயம் வலியைத் தரும். ஆனால், மாறத்தான் வேண்டும்’’ஏனென்றால் மாற்றம் மட்டுமே நிரந்தரம்.

ஆக,மாற்றம் பெற்ற மனிதர்களாவோம்.கண்டிப்பாக நாமும் தூய சவேரியார் ஆகலாம்.
தூய சவேரியாரின் அருள்  பெற்றவர்களாய் தூவுவோம் இந்திய மண்ணில் விசுவாச வித்துக்களை.


அனைவருக்கும் தூய சவேரியார் பெருநாள் வாழ்த்துக்கள்!


No comments:

Post a Comment