Sunday 6 December 2015

படுக்கை !

படுக்கை என்றாலே சுகமான ஒன்று.படுக்கையில் இரண்டு வகை உண்டு .ஒன்று  தூங்கலாம்,ஓய்வு எடுக்கலாம், நம் இஷ்டத்துக்கு அமர்ந்து எழும்பலாம்.இது ஒருவகையான சுகமான படுக்கை.

ஆனால், இரண்டாம் வகை படுக்கை  பல பேருக்கு சுமையாக மாறுகிறது.அதாவது,தீவிர நோயில் உள்ளவர்களுக்கும்,மரணப் படுக்கையில் உள்ளவர்களுக்கும்.  இதை நாம் நாளை நற்செய்தியில் காணலாம்.


 நாளை நற்செய்தி வாசகத்தில் இயேசு முடக்குவாதமுற்றவரை தன் படுக்கையை எடுத்துக் கொண்டு போகச் சொல்கிறார். படுக்கையில் இருப்பது என்பது தேக்க நிலையைக் குறிக்கும்.

ஓடுகின்ற தண்ணீரில் எவ்வளவு அழுக்கு கலந்தாலும் அது தன்னைத்தானே சுத்தம் செய்து விடும். தேங்கிய தண்ணீரில் அழுக்கு சேர்ந்தால் அது தண்ணீரையே பாழாக்கி விடும்.

 நாம் பொய், பொறாமை, பகைமை, பகிர்வின்மை போன்ற படுக்கையை விட்டு எழுந்து வான் வீட்டை நோக்கி நடக்க இந்த திருவருகைக் காலத்தில் அழைக்கப்படுகிறோம்.

 நாம் பாவிகள் என்று முடக்கிக் கிடப்பதை விட பாவிகளாக இறைவனை நோக்கிச் செல்லும் போது பாவம் நம்மை விட்டு அகன்று போகும். நாமும் தூயவர்களாக நிறைவாழ்வைப் பெற்றுக் கொள்வோம்.


ஓடுகின்ற தண்ணீரானது நன்மை நிறைந்தது.எப்போதும் பிறருக்கு வாழ்வையே கொடுக்கும்.

தேங்கிய அழுக்கு தண்ணீரானது தீமை நிறைந்தது .இதனால்  யாருக்கும் பயன் இல்லை.

ஆக, நம் வாழ்வு ஓடுகின்ற தண்ணீராக இருக்க வேண்டும்.மாறாக தேங்கிய தண்ணீராக இருக்க கூடாது.

நம் வாழும் வாழ்க்கை ஓடும் தண்ணீரா? அல்லது தேங்கும் அழுக்கு தண்ணீரா? சிந்திப்போம்!

1 comment:

  1. dear acca today only we got the tower for the net, then how are you acca.thank you for the mail and for all your comments படுக்கையில் இருப்பது என்பது தேக்க நிலையைக் குறிக்கும்.this is a new reflection for me. have a nice day

    ReplyDelete