Friday 4 December 2015

இழப்பு !

"வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரேயல் மக்களிடம் செல்லுங்கள்.அப்படிச் செல்லும்போது "விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப்  பறைசாற்றுங்கள்". (மத்தேயு 10:6-7).

வீழ்ந்த பிறகு பள்ளத்தை குறை சொல்லி  என்ன நடக்கப்போகிறது
முறைப்படி நாம் தானே பார்த்து செல்லவேண்டும் .
எங்கு சென்றாலும் முன்னெச்சரிக்கையுடன் செல்ல வேண்டியது நாம் தான் கவனக்குறைவில் சென்றால் இழப்பு நமக்குத்தான் .

மனிதர்கள் இழப்பால்  சிந்துகின்ற கண்ணீரைக் கண்டால்
பழுத்த இலை மரத்திலிருந்து விழுவதையே காட்டும்
கண்ணையொத்த மாந்தர்களை, பிரியமானவர்களை  நாம்  பிரிந்தால்
காசினியில் எவர் வந்து பிறர்  துயரை துடைக்கக் கூடும்?

ஈடில்லா இழப்பை எண்ணி எண்ணி அழத்தான் முடியும் 
யாராலும் அந்த இழப்பை ஈடு கட்ட முடியாது.
நம் சந்தோசத்தை இரட்டிபாக்கலாம் பலர் ஆனால் -நம்
இழப்பை குறைக்க ஒருவரால்  கூட  முடியாது 
இயற்கையோடு பேசி ஈடு கட்ட வேண்டியது தான்.

உணர்ச்சிகளை மொழியாலே உரைக்கின்ற எவரும்
உயிரிருந்தும் உணர்விருந்தும் பேசாத மரமே - நாம் 
இனஞ்சேர்த்துப் பார்த்தாலும் ஒன்றாவதில்லை
எனவே நான் இப்புவியில் வாழும்  மாந்தர் நிலைமைகளே
 பரிதாபம் என்பேன்!

பள்ளியில் படிக்கும் போது நான் பார்த்த சென்னை இன்று பரிதாப நிலையில்!

கல்லூரியில் படிக்கும் போது நான் பார்த்த சென்னை இன்று அழகு இழந்த நிலையில்!

பணி புரியும் போது நான் பார்த்த சென்னை இன்று சீர்குலைந்த நிலையில்!

படைப்போம்! புதுபிப்போம்!உருவாக்குவோம்!  சென்னையை மறுபடியும்!   

வாழ்வை இழந்தவர்கள்!
பிள்ளைகளை இழந்தவர்கள்!
உறவை இழந்தவர்கள்!
மருத்துவமனையில் உயிர் இழந்தவர்கள்!
செல்வத்தை இழந்தவர்கள்!
சிரிப்பை இழந்தவர்கள் !
 இவர்கள் எல்லாம் இழந்திருந்தாலும்
 இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை!!! - இப்பேற்பட்ட
மக்கள் தான் என் சென்னை வாழ் மக்கள்.

பசித்திரு,தனித்திரு,விழித்திரு என்பதற்கிணங்க இவர்களின் வாழ்கையை புரட்டிபோட்டது வெள்ளம். வெள்ளத்தின் அருமை தெரிந்த பிறகே இவர்களுக்கு பசியின் அருமையும்,தனிமையின் அருமையும் புரிந்தது.இப்போதே புரிகிறது இவர்களுக்கு விழிப்பு என்ற  முன்மதியின் அருமை.
இவர்களை வெள்ளம் துன்பப்படுத்தியிருந்தாலும் நாளாக,நாளாக கண்டிப்பாக இயற்க்கை இவர்களை  ஆறுதல்  படுத்தும் என்பதை நம்புவோம்.

இயேசு மூன்றாண்டு பணிபுரிய 30-து வருடங்கள் தயார் செய்தார்.வருடம் வருடம் பருவ மழை தமிழ்நாட்டில் வருவது தெரிந்தும் 12-டு மாதமும் 365-ந்து நாள்களும் எந்த தயாரிப்பும் இல்லாமல் நம் தலைவர்கள் நாட்டிற்கு  பணி செய்கிறோம் என்று கூறுவது என்னைபொருத்தவரை கேள்விக்குறியே??


இன்று நாம் இழந்தது அப்பாவி மக்களை.ஆனால் புரட்டிபோட்டது வெள்ளம் எல்லோரையும்.வெள்ளம் யார் மாடி வீட்டில் இருக்கிறார்கள்,யார் குடிசையில் இருக்கிறார்கள் என்ற பாகுபாடே பார்க்கவில்லை.
ஆக,இன்னும் சிறிது நாட்களில் இயற்கையே நமக்கு ஆறுதல் தரும் அந்த நாள் வெகு விரைவில் உள்ளது என்பதையும்  மற்றும் கடவுள் நம்மை ஆசீர்வதிப்பார் என்பதையும் நம்புவோம்.

 நாளைய நற்செய்தி இயேசுவின் மூன்றாண்டு பணியை சுருக்கித் தருகின்றது.இயேசு சென்ற இடமெல்லாம் நற்செய்தி அறிவித்தார்.ஜெபக்கூடத்தில் இறையாட்சி பற்றி விளக்கினார்.உடல் ,உள்ள நோய்களைப் போக்கினார்.மக்கள் கூட்டத்தைக் கண்டபோதெல்லாம் அவர்கள் மேல் பரிவு கொண்டார்.

அதே பணியைத் தம் சீடர்களும் செய்ய அழைக்கின்றார்.அந்த அழைப்பை ஏற்ற நாம் முதலில் நம்மைப் படைத்த அன்பு கடவுளை நெஞ்சார நேசிக்க வேண்டும்.

மேலும் தீய பழக்கங்கள்,பிறரன்புக்கு எதிரான நம் சொல்,செயல்கள் அனைத்தையும் களைந்து விட்டு இயேசுவின் சாட்சிகளாக வாழ வேண்டும்.

பரிவும் இரக்கமும் கொள்வோம்.பிறரன்பு பணிகளை தொடர்வோம்.வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நம் மக்களுக்காக ஜெபிப்போம்.கரம் கொடுப்போம். 


நெருங்கி வரும் விண்ணரசில் நாம்  எல்லோரும் பங்காளிகளாக இருக்க தொடர்ந்து வேண்டுவோம்.வாழ்கையை மாற்றுவோம் நேர்வழியில் செல்வோம்.இறைவனின் மக்களாவோம்!!!

2 comments:

  1. Dear akka , today 's thought is good .the lives experience of today's situation teach us many things.your reflection is practical. thank you.

    ReplyDelete
  2. Dear akka , today 's thought is good .the lives experience of today's situation teach us many things.your reflection is practical. thank you.

    ReplyDelete