Saturday 5 December 2015

இறைவனில் உறவு மலர!

பரந்து விரிந்த கடல்
ஓரிடத்தில் ஊற்றெடுத்த நீர்தான்!

பரந்து விரிந்த வானத்தின் வண்ணம்
ஓரிடத்தில் ஊற்றெடுத்த நிறம்தான்!

பரந்து விரிந்த இந்த உலகம்
ஓரிடத்தில் ஊற்றெடுத்த கருதான்!

இதுபோல் தினமும் பார்க்கும் மாந்தர்கள் அனைவரும் நம் உறவுகளே!

சில உறவுகளால் நம் வாழ்வில்  அர்த்தம் கிடைக்கும் !பல உறவுகளால் நமக்கு ஆறுதல் கிடைக்கும்!


நாளைய வாசகங்கள் நமக்கு உரைப்பது இதுவே.உலகின் மீட்புக்காக மெசியா வருகையை இறைவாக்கினர்கள் மூலமாக முன் அறிவிக்கின்றார் இறைவன்.
அதோடு அவருக்காக ஆயத்தம் செய்ய வேண்டும் என்றும் அழைக்கிறார். இறைமகனைப் பெற்றுக் கொள்ள மக்களை மனம் மாற அழைத்ததில் மிகவும் தலை சிறந்த போதகர் திருமுழுக்கு யோவான். இவர் செய்தது உன்னத செயல்.


இதைப் பற்றி தான் இறைவாக்கினர் எசாயா முன் அறிவித்திருக்கிறார். "பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும், மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை நேராக்கப்படும்; கரடுமுரடானவை சமதளமாக்கப்படும் ".


கடவுளின்  இரண்டாம் வருகையில் நாம் அனைவரும்  அவரின் தூய மக்களாக எழுந்து ஒளிவீசுவோம் என்பதையும் உணர்வோம்.


இன்றைய காலத்திலே  நம்மில் நிரப்பப்பட வேண்டியவை இவைகளே.
1. பேராசை என்னும் பள்ளத்தாக்கு நிரப்பப்பட வேண்டும்.
2. ஆணவம் நேர்மையற்ற கோணலான வாழ்வு நேரிய வாழ்வாக வேண்டும்.
3. கரடு முரடான  உறவுகள் சரி செய்யப்பட்டு சமாதானத்தின் உறவு மலர வேண்டும்.
இதையே கடவுள் நம் ஒவ்வொருவரிலும் விரும்புகிறார்.

உறவில்லாமல் உலகம் இல்லை .......

இருவேறு உடலும் இருவேறு உயிரும்
மனசும் உறவு கொள்வது காதல் .....

நீர்,நிலம்,நெருப்பு,காற்று,ஆகாயம்
இவையனைத்தும் தன் சக்தியை வெளிபடுத்த
கொண்ட உறவு உலகம் ......

உயிருக்குள் உயிராய் உருவெடுத்து
முகத்தின் முகப்பு தோன்றிட
பாசமாய் கொண்ட உறவு பெற்றோர்கள்.....

சின்ன சின்ன சண்டைகள் போட்டு
குட்டி குட்டி குறும்புகள் செய்து
திட்டி தீர்த்துக்கொள்ள கூடிய உறவு சகோதரி .......

உண்மைக்கு உன்னதமான ஒருவனும்
தாய்க்கு நிகரான ஒருத்தியும்
சேர்ந்திருக்கும் உறவு நட்பு .....

இறைவார்த்தையின் படி  உறவுகள் மலர வாழ்வோம்  ! கண்டிப்பாக எந்த மாதரியான கோணலானவைகளும் இறைவனால் நேராக்கப்படும் என்பதை நம்புவோம்.

 இறைவனுடன் சேர்ந்து உறவுகளை வளர விடுவோம் .அந்த உறவுகள் குழந்தையை போன்று கள்ளம் கபடம் இல்லாததாக இருக்க இறைவனை வேண்டுவோம்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நம் மக்களுக்கு உறவாக இருப்போம்.உதவுவோம்!

"யாதும்  ஊரே யாவரும் கேளிர்" என்ற கனியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளுக்கு ஏற்றவாறு உறவை மலர விடுவோம் வாழ்வில்.


No comments:

Post a Comment