Tuesday 19 January 2016

போர்!

"அப்பொழுது தாவீது பெலிஸ்தியனிடம், "நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய்;
நானோ நீ இகழ்ந்த இஸ்ரயேலின் படைத்திரளின் கடவுளாகிய, படைகளின் ஆண்டவர்தம் பெயரால் வருகிறேன்.
இன்றே ஆண்டவர் உன்னை என் கையில் ஒப்புவிப்பார்; நான் உன்னை வீழ்த்தி உன் உடலைத் துண்டிப்பேன்"; நாளைய வாசகத்தின் இந்த வரிகள் மிக மிக முக்கியமானவை மற்றும் சிந்திக்க  கூடியவை.  

கடவுளை முக முகமாய் கண்டு அனுபவித்த ஒருவன் தன் அனுபவத்தால் கூறக்கூடிய வார்த்தைகள்.இங்கு தாவீது தொடுத்திருக்கும் போர் சொற்ப்போர்.அதுவும் கடவுள் நம்பிக்கையினால் வந்த சொற்ப்போர்.

போர்கள் பல வகைப்படும்.அவைகள்
1.வான் போர்
2.விண் போர்
3.தரைப்போர்
4. ஏவுகணைபோர்
5.கப்பல் போர்
6.பாரதப் போர்
7 உலகப்போர்
8.ஆண்டவரின் போர்

ஆண்டவரின் போர் என்பது - அது  இன்று நாம் காண்பது.

இங்கு நாம் இரு முக்கிய நிகழ்வுகளை பார்க்கிறோம்.என்னவென்றால் போருக்குச் செல்பவன் எப்படி வரவேண்டுமோ அப்படி வந்திருக்கான் பெலிஸ்தியன் ஆனால் தாவீதோ ஏதோ நம்ம ஊரில் காட்டாம்  புளி வார் வைத்து காக்கை,கொக்கு பிடிப்பது போல் வருகிறார் தாவீது.இங்கு தாவீதிடம் இருந்தது நம்பிக்கை ஏனென்றால் இது ஆண்டவரி போர் என்ற நம்பிக்கை.

ஆனால் நம்ம பெலிஸ்தியன் ஆணவத்துடன் நான் வீரன் என மார்தட்டி வருகிறான் கடவுள் அச்சம் சிறிதும் இல்லாமல்.


அந்த நிகழ்வு பெலிஸ்தியனை ஏமாற்றுவது போல் உள்ளது.அதனால் கோபப்படுகிறான் தாவீதின் மேல்.கோபப்பட்டு என்ன பயன் தாவீது வந்திருப்பதோ கடவுளின் சார்பில்.அப்போ வெற்றி யாருக்கு?

ஆணவம் இல்லாத மனிதராய் இருந்தால் பெலிஸ்தியன் தாவீது கூறிய வார்த்தையைக் கேட்டவுடன் நாடு நடுங்கி இருக்க வேண்டும்.அது தான் அவனுக்கு இல்லை.

இதனைத் தொடர்ந்து  நாளைய நற்செய்தியில் ஓய்வுநாளில் இயேசு கைசூம்பியவரைக் குணப்படுத்துகின்ற நிகழ்ச்சியை நாம் பார்க்கின்றோம்.

இதுவும்  ஒரு வகையான போர்.இதன் மூலம் தான் இயேசுவுக்கு சிலுவைப் போர் ஆரம்பமாகிறது.

ஓய்வுநாளில் மருத்துவ உதவி என்பது உயிர் ஆபத்தில் இருக்கிறவர்களுக்கு மட்டும்தான் செய்ய முடியும் என்பது ஓய்வுநாள் ஒழுங்குகளில் ஒன்று.
பேறுகால வேதனையில் துடிக்கிற பெண்ணுக்கு ஓய்வுநாளில் மருத்துவ உதவி செய்யலாம். ஆனால் வெட்டுப்பட்ட ஒருவருக்கு வெட்டப்பட்ட இடத்தில் துணியால் சுற்றலாம். மருத்துவ உதவி செய்ய முடியாது. ஏனெனில் அங்கே உயிருக்கு ஆபத்து இல்லை.

 நாளையப் பகுதியிலே கைசூம்பிப்போன மனிதருக்கு உயிர் ஆபத்து ஒன்றுமில்லை. அவருக்கு இயேசு அடுத்தநாளில் கூட குணம் தந்திருக்கலாம்.

 ஆனால், எப்படி அவரை ஒழிக்கலாம் என்று சூழ்ச்சி செய்கிற கூட்டம் குற்றம் காணுகிற நோக்கத்தில் அங்கிருக்க, எதற்காக இயேசு தானே அவர்களின் வலையில் விழ வேண்டும்? என்ற கேள்வி நமக்குள் எழலாம்.

 நன்மை செய்வதற்கு நாளோ, இடமோ, மனிதர்களோ தடையாக இருக்கக்கூடாது என்பது தான் இயேசு அவர்களுக்கு உணர்த்துகின்ற பாடம். நன்மை செய்வதனால் சட்டத்தை மீறுவதானால், அதை இயேசு துணிவோடு மீண்டும் மீண்டும் செய்யத் தயாராக இருக்கிறார்.

நன்மை செய்வது தான் ஒருவரின் வாழ்வில் முழுமையான அர்ப்பணமாக இருக்க முடியும் என்று இயேசு கற்றுத்தருகிறார். நன்மை செய்ததற்காக இயேசு தன்னுடைய இன்னுயிரையே மகிழ்ச்சியோடு கொடுத்தார். நம்முடைய வாழ்வில் நாம் மற்றவர்களுக்கு நன்மை செய்வதை வாழ்வின் நோக்கமாகக் கொள்வோம்.
அவ்வாறு  கொண்டு வாழ்வோமாகில் நாம் எந்தப் போரையும் கண்டு பயப்பட தேவை இல்லை.எல்லாப் போரும் நன்மையிலேயே முடியும்.

பல நேரங்களிலும் சில நேரங்களிலும் நாம் செய்யும் காரியங்கள் இவ்வாறே கடவுளின் பார்வையில் அருவருக்கத் தக்கதாக உள்ளது.ஆகவே வாழ்வில் தோல்வி அடைகிறோம்.

நாம் அறிந்து கொள்ளவேண்டியது ஒன்று ஆண்டவரின் போருக்கு  ஆண்டவர் வாளையும் ஈட்டியையும் ஒரு நாளும் பயன் படுத்தியதே இல்லை. அவர் பயன் படுத்தியது எல்லாம் உண்மையான சொற்களும்,நீதியும், நேர்மையும் நிறைந்த செயல்களும் தான்.
அம்மக்களையே அவர் தேடுகிறார்,தேர்ந்தெடுக்கிறார்.அந்த வரிசையில் தான் தாவீது வருகிறார்.

நாம் எப்பொழுது இந்த வரிசையில் இடம் பெறப்போகிறோம் என்று ஆண்டவர் நம் ஒவ்வொருவரையும் நோக்கி கேட்கிறார்.


No comments:

Post a Comment