Saturday 30 January 2016

உறவுக்கு ஒரு சவுக்கடி!

"உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்"

எந்த நிமிடம் ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க முன்வந்தாரோ அந்த நிமிடமே அவரைக் கொல்லும் முயற்சியிலும் இறங்கிவிட்டார்கள். ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை என்று எப்போது பேசத் தொடங்கினாரோ, அப்போதே கொலை செய்யவும் அட்வான்ஸ் கொடுத்தாகிவிட்டது.

 ஆமாம்."அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர்" (லூக்4:29)

உண்மையும் எதார்த்தமும் எல்லா நேரமும் உயிருக்கு எதிரி. உண்மையின் விலை மிக மலிவு. எதார்த்தம் மலிவுச் சரக்கு.

போலி கௌரமும் அந்தஸ்தும்,காசு கொடுத்து வாங்கிய பெயரும் புகழும், செட்அப் செய்த மதிப்பும் மரியாதையும், படிக்காமல் வாங்கும் பட்டமும், அலைந்து அனுபவிக்கும் பதவியும் உண்மையின் கருவறுக்கும் எதிரிகள் அல்லவா.

கொலையும் செய்வதை கொள்கையாக, தர்மமாகக் கருதுவார்கள். இயேசுவை மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றது இன்றைக்கு பெரிய விஷயம் அல்ல.

இந்த சமுதாயத்தை இன்றைக்கு வாழ வைப்பது இது போன்ற நவீன இயேசுக்கள்தான். உண்மைக்கும் எதார்த்தத்துக்கும் சான்று பகரும் நீங்கள் இருந்தால் மட்டுமே சமுகம் திருந்தும்.

இயேசு சுட்டிக்காட்டிய இரு நிகழ்ச்சிகளும் தன் இன, சமூக, உறவுக்கு ஒரு சவுக்கடி. நேரம் வரும் வரை யாரும் எவரும் எதையும் செய்ய முடியவி;ல்லை. நம்மையும் யாரும் அசைக்க முடியாது. உண்மையை உரக்க உரைப்போம். இனிது வாழ்வோம்.

No comments:

Post a Comment