Wednesday 27 January 2016

இறையறிவில் வளர்வோம்!

நாளை நற்செய்தியில் ”உள்ளவருக்குக்கொடுக்கப்படும்” என்கிற வார்த்தைகள் நமது சிந்தனையைத் தூண்டுவதாக இருக்கிறது.


 இதை ”அறிவு” என்கிற கொடையோடு பொருத்திப்பார்க்கலாம். நாம் எந்த அளவுக்குக் கற்றுக்கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நமது அறிவு வளரும்.


நாம் எடுக்கக்கூடிய முயற்சிதான், நம்மை ஒரு பாடத்தில் சிறந்து விளங்குவதற்கு உறுதுணையாக இருக்கும். எந்த அடிப்படை ஞானமும் இல்லாமல் ஒன்றில் நாம் சிறந்த புலமை பெற முடியாது.


கடவுளைப்பற்றிய நமது புரிதலும் இதுதான். எந்த அளவுக்கு கடவுளைப்பற்றிய அறிவில் நாம் வளர வேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்த அளவுக்கு நாம் கடவுளைப்பற்றி தெரிந்து கொள்ளலாம். கடவுளைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல், கடவுளைப்பற்றி நாம் எந்தக்கருத்தையும் சொல்ல முடியாது.

செபத்தின் பலன் ஒருவருக்குக் கிடைக்க வேண்டுமென்றால், அவர் செபிக்க வேண்டும். ஒவ்வொருநாளும் செபிக்க வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் செபிக்க வேண்டும். அப்படி செபிக்கிறபோதுதான், செபத்தின் மேன்மையை நாம் அறிய முடியும். செபத்தின் ஆழத்தை நாம் அறிந்துகொள்ள முடியும்.

கடவுளைப்பற்றி அறிவில் நாம் தினமும் வளர, கடவுளைப்பற்றி அறிய அதிகமான முயற்சிகள் எடுக்க வேண்டும். கடவுளைப்பற்றி அறிய நாம் எடுக்கக்கூடிய முயற்சிகள் தான் நாம் கடவுள் அறிவில் வளர துணைசெய்யும். அத்தகைய ஒரு முயற்சியை நாம் எடுப்போம். இறையருளில், இறையறிவில் வளர்வோம்.

No comments:

Post a Comment